சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று மும்மடங்கானது

சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) மும்மடங்கானது. நேற்று நண்பகல் நிலவரப்படி 13,046 பேருக்குத் தொற்று உறுதியானது.
வியாழக்கிழமை இந்த எண்ணிக்கை 4,087ஆக இருந்தது.

வெள்ளிக்கிழமை பதிவான தொற்றுப் பாதிப்பில் 10,312 பேருக்கு ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.

எஞ்சிய 2,734 பேருக்கு பல்படியத் தொடர்வினை பரிசோதனை (பிசிஆர்) மூலம் தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் கிருமித்தொற்று நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு அன்றாடம் வெளியிட்டு வரும் தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 162 பேருக்கும் தொற்று உறுதியானது. கொவிட்-19க்கு மேலும் அறுவர் உயிரிழந்தனர்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மருத்துவமனைகளில் 998 பேர் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 96 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 15 பேர் உள்ளனர்.

வாராந்திர தொற்று விகிதம் வெள்ளிக்கிழமை 1.39ஆக இருந்தது. வியாழக்கிழமை அது 1.23ஆக இருந்தது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!