புதிய கொவிட்-19 மாத்திரைக்கு சிங்கப்பூர் அனுமதி

கொவிட்-19 கிருமிக்கு சிகிச்சை அளிக்கும் புதிய மாத்திரையை சிங்கப்பூரில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அறிவியல் ஆணையம் வியாழக்கிழமை (பிப்ரவரி 3) அன்று இதைத் தெரிவித்தது.

'பேக்ஸ்லோவிட்' எனும் இந்த மாத்திரையை ஃபைசர் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

"மிதமான கொவிட் தொற்று ஏற்பட்டு, அது கடுமையான நோயாக மாறக்கூடிய அபாயத்தில் உள்ள பெரியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல் மாத்திரை இது. மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதையும் மரணத்தையும் குறைப்பது இதன் குறிக்கோள்," என்று ஆணையம் கூறியது.

சுகாதார அறிவியல் ஆணையத்தின் கிருமிப்பரவல் சிறப்பு அனுமதி நடைமுறையின் கீழ் அந்த மாத்திரைக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.

மருந்துகள் ஆலோசனைக்குழுவிடம் ஆலோசனை பெற்று ஆணையம் மாத்திரைக்கு ஒப்புதல் வழங்கியது.

'பேக்ஸ்லோவிட்' மாத்திரையை ஐந்து நாள்களுக்கு, தினமும் இரண்டு முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை கொவிட்-19 அறிகுறிகள் தொடங்கிய ஐந்து நாள்களுக்குள் முடிந்தவரை விரைவாக உட்கொள்ள வேண்டும்.

சுகாதார அமைச்சின் ஆணைப்படி, கடும் நோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த மாத்திரை வழங்கப்படும் என்று ஆணையம் கூறியது.

நிர்மட்ரெல்விர், ரிட்டொனவிர் எனும் இரண்டு மருந்துகளைக் கலந்து இந்த மாத்திரை தயாரிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!