உலகின் ஆகப் பெரிய குடும்பத்தின் தலைவர் எனக் கருதப்படும் 76 வயதான சியோங்ககா அகா சியோன் நேற்று காலமானார்.
அண்மைக் காலமாக அவர் உடல்நலம் குன்றியிருந்தார் என்றும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
சியோங்ககாவுக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 பிள்ளைகள் உள்ளனர். மேலும் 33 பேரன் பேத்திகளும் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவரது வம்சாவழியில் ஆண்கள் பலதார திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. இதனால் அவர் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதன்மூலம் உலகத்தின் ஆகப் பெரிய குடும்பத்தின் தலைவர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு மிசோராம் முதல்வர் சோரம் தங்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.