இந்தியாவில் புதிய வேளாண் சட்டங்கள் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி, ஓராண்டுக்கும் மேலாக புதுடெல்லி வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று (டிசம்பர் 11) வீடு திரும்பத் தொடங்கினர்.
மகிழ்ச்சி, ஆரவாரம், கொண்டாட்டம் நிம்மதியுடன் அவர்கள் சொந்த ஊருக்குப் புறப்படத் தொடங்கினர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதுடெல்லிக்கு இட்டுச் செல்லும் சாலைகளில் பல்லாயிரம் விவசாயிகள் குழுமினர்.
சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை அரசாங்கம் மீட்டுக்கொள்ளும் வரை நகரப் போவதில்லை என்று கூறி அவர்கள் தங்கள் குடும்பத்தினர், உடைமைகளுடன் கிட்டத்தட்ட அங்கு குடியமர்ந்துவிட்டனர்.
இன்று அந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்லும் பணி மும்முராக நடைபெற்றது.
விவசாயிகள் குழுக்களாகச் சென்றதால், புதுடெல்லியின் சில பகுதிகளில் போக்குவரத்து மெதுடைந்தது. இருப்பினும், மக்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர்.
ஓராண்டில் உருவாகி வலுவான நட்பும் உறவும் நீங்காது என்று பலர் உறுதி கூறினர்.