திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
ஒரே நாளில் 6.8 கோடி ரூபாய் காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் அதிகபட்ச காணிக்கையாக 5.73 கோடி ரூபாய் உண்டியலில் செலுத்தினர்.
திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். கொவிட்-19 காரணமாக கடந்த சில மாதங்களாக கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கிருமித் தொற்று குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கோவிலுக்கு பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.