புதுடெல்லி: மத்திய அரசைக் கண்டித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா டெல்லியில் புதன்கிழமை போராட்டம் நடத்தினார். இதில் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லி ஜந்தர்மந்தரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார். பேரணியாக சென்று அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். கேரள மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானவர்கள் அவருடன் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மி முதல்வர்களான அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), பகவந்த்மான் (பஞ்சாப்) ஆகியோர் பங்கேற்றனர்.
கேரளாவுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக பினராயி விஜயன் போராட்டத்தின்போது குற்றம் சாட்டினார்.