குழந்தையைக் கொன்றதாக தாய் உட்பட அரசாங்க ஊழியர் இருவர் மீது குற்றச்சாட்டு

மலேசிய இஸ்லாமிக் மேம்பாட்டுத் துறையைச் (Jakim) சேர்ந்த ஒரு பெண், கல்வி அமைச்சில் பணிபுரியும் மற்றொருவர் ஆகிய இருவர் மீதும் 23 மாதக் குழந்தையை இம்மாதத் தொடக்கத்தில் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இறந்துபோன குழந்தையின் தாயான நோர் ஐசியா முகமது யூனூஸ் எனும் 37 வயது பெண், அவருடன் வசிக்கும் 33 வயது நூர் ஐசியா இப்ராகிம் ஆகிய இருவர் மீதும் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இவ்விரு பெண்களும் முகம்மது அல்ஃபாதெ ஹம்டி எனும் அந்தக் குழந்தைக்கு செப்டம்பர் மாத நடுவிலிருந்து இம்மாதம் நான்காம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மரணத்தை விளைவித்ததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மக்கள் நிறைந்திருந்த நீதிமன்றத்தில், குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது இவ்விரு பெண்களும் முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டவில்லை என்று கூறப்பட்டது.

இவ்விரு பெண்களையும் மனநலச் சோதனைக்கு அனுப்புமாறு அவர்களது வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து அதற்கான ஆணையை மாஜிஸ்திரேட் ஷா விரா அப்துல் ஹலிம் பிறப்பித்தார்.

கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளின்படி குழந்தையின் உடல் முழுவதும் 89 காயங்கள், வீக்கம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுவனிடம் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இருக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடைபெறும்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!