நீதிமன்றத்துக்கு வந்தார் ரோஸ்மா மன்சூர்; அவருக்கு மருத்துவ விடுப்பு அளித்த மருத்துவரிடமும் விசாரணை

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தி வசதி வழங்கவும் அவற்றைப் பராமரிக்கவும் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள்

பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் மீதான ஊழல் வழக்கு, கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 5) தொடங்கியது.

உடல்நலம் சரியில்லை எனக் கூறப்பட்டபோதும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஊழல் வழக்கு விசாரணை கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்தது. ஆனால், உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நீதிமன்றத்திற்கு ரோஸ்மா வரவில்லை.

சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று ரோஸ்மா அனுமதிக்கப்பட்டதை அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக கறுப்பு நிற கார் ஒன்றில் இன்று காலை நீ அவர் திமன்ற வளாகத்தில் வந்து இறங்கினார்.

பச்சை நிற மலாய் பாரம்பரிய உடையான ‘பாஜு குரோங்’ அணிந்திருந்த அவர், புன்னகையுடன் காணப்பட்டார். அவரைப் பிரதிநிதிக்க மூன்று வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

இந்த ஊழல் வழக்கில் மூன்று குற்றச்சாட்டுகளை ரோஸ்மா எதிர்நோக்குகிறார்.

குற்றம் நிரூபணமானால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் குறைந்தது 10,000 ரிங்கிட் ($3,350) அபராதமும் அவருக்கு விதிக்கப்படலாம்.

இந்நிலையில், ரோஸ்மாவுக்கு மருத்துவ விடுப்புச் சீட்டு வழங்கிய மருத்துவர், மலேசிய ஊழியல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்தில் சிக்கிக்கொண்டார்.

இதனைத் தெரிவித்த ரோஸ்மாவின் வழக்கறிஞர் ஜக்ஜிட் சிங், இச்சம்பவம் குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ரோஸ்மாவிற்கு மருத்துவச் சீட்டு வழங்கிய மருத்துவரை ஆணையம் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டிய திரு ஜக்ஜிட் சிங், இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

“மருத்துவரை விசாரணைக்கு உட்படுத்தியவர் யார்? இதனை நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது. விசாரணைக்கு உத்தரவிட்டவர் தாமாக முன்வந்து மன்னிப்புக் கோர வேண்டும்,” என்று திரு ஜக்ஜிட் சிங் சொன்னார்.

எனினும், திரு ஜக்ஜிட் சிங்கின் விவாதங்களை அரசாங்க தரப்பு வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் நிராகரித்தார். ஊழியல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் அவர்களது பணியைத்தான் செய்வதாக அவர் விளக்கினார்.

“தாம் அச்சுறுத்தலுக்கு ஆளானதாக அந்த மருத்துவர் எண்ணினால், அவர் போலிசிடம் புகார் அளிக்க வேண்டும். மற்றபடி, இந்த வழக்கு தொடர வேண்டும்,” என்று திரு ஸ்ரீராம் கூறினார்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று திரு ஜக்ஜிட் சிங் கோரினார். எனினும், இதில் நீதிமன்றம் குறுக்கிடாது என்றும் அச்சுறுத்தலுக்கு தாம் ஆளானதாக மருத்துவர் நினைத்தால் அவர் புகார் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி முகம்மது ஸைனி மஸ்லான் கூறினார்.

#மலேசியா#ரோஸ்மாமன்சூர் #ஊழல் #மருத்துவவிடுப்பு #தமிமுரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!