நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணிகளைத் திடுக்கிட வைத்தது ஒரு பாம்பு.
கோலாலம்பூரை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த ஏர் ஆசியா விமானம் இதன் காரணமாகத் திசை திரும்பியது.
விமானத்தின் விளக்குப் பகுதியில் ஒரு பாம்பின் உருவம் தென்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்துக்கொள்ளப்பட்டன.
பயணிகளின் பாதுகாப்பைப் கருதி சாபாவின் தவாவ் நகருக்குச் செல்லவேண்டிய விமானம் கூச்சிங்குக்கு திசை திருப்பட்டதாக ஏர் ஆசியா நிறுவனம் கூறியது.
இதுபோன்ற சம்பவங்கள் மிக அரிது என்று நிறுவனம் சொன்னது.
இந்தச் சம்பவம் குறித்து இணையவாசிகளுக்குப் பலவிதமான கருத்துக்கள்.
ஒரு வேளை விமானப் பயணச்சீட்டின் விலை அதிகமாக இருந்திருக்கலாம். அதனால் பாம்பு இலவசமாக பறக்க முயன்றிருக்கிறது என சிலர் ஊகித்தனர்.
சிக்கனமான இந்தப் பாம்பு இன்னும் அதிகாரிகளின் கையில் சிக்கவில்லை.