கிருமித்தொற்று போராட்டத்தில் நிலவேம்பு பலன் தருமா? மருத்துவர்கள் கருத்து

நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை குடிநீராக்கிப் பருகுவதினாலேயே சிறந்த பலன்களைப் பெற முடியும் - சித்த மருத்துவர்

பஞ்ச நிம்பங்களில் ஒன்றான நிலவேம்பு என்ற மூலிகையில் சுரம் குறைக்கும் வேதிப்பொருள்கள் உள்ளன.

அந்த வேதிப்பொருட்கள் சுரத்தையும் ‘வைரஸ்’ கிருமியினால் ஏற்படும் நோயின் தீவிரத்தையும் குறைப்பதோடு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டும் தன்மையும் கொண்டிருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

முதலில் நிலவேம்புப் பொடியும் நிலவேம்புக் குடிநீரும் ஒன்றல்ல என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

நிலவேம்புக் குடிநீரில் நிலவேம்பு, வெட்டிவேர், சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை வேர், சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு என ஒன்பது மூலிகைகள் கலந்துள்ளன.

டெங்கி, பறவைக் காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற பலவகைப்பட்ட சுரங்கள், சுவாச நோய்கள், கைகால் வலி, வீக்கம் உட்பட பல நோய்களுக்கும் தற்போதைய கொரோனா கிருமித் தொற்றுக்கும் சித்த மருத்துவர்களால் நிலவேம்புக் குடிநீர் பரிந்துரைக்கப் படுகிறது.

நிலவேம்புப் பொடியினை மட்டுமே தனித்துக் குடிநீராக்கிப் பருகுவதை விடுத்து, நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை குடிநீராக்கிப் பருகுவதினாலேயே சிறந்த பலன்களைப் பெற முடியும். கர்ப்பிணிகளும் ஒரு வயது நிரம்பாத குழந்தைகளும் ஏற்கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரும் இதைத் தவிர்க்க வேண்டும்.

நிலவேம்புக் குடிநீர் பயனளிக்காமல் போகலாம் - ஆயுர்வேத மருத்துவர்

கொரோனா கிருமி ஒரு சளிக்காய்ச்சல் கிருமி.

இது நுரையீரலைப் பாதித்து, தும்மல், இருமல், சுவாச அழற்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சுற்றுப்புறத்தில் பலவிதமான நுண்ணுயிரிகள் இருந்தாலும் அவை எல்லாரையும் பாதிப்பது கிடையாது.

சிறு குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், ஏற்கெனவே நுரையீரல் நோய்களால் அல்லல்படுவோர் போன்றவர்களையே அதிகம் பாதிக்கிறது.

கொரோனா கிருமியால் அதிகமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதால் நிலவேம்புக் குடிநீர் பயனளிக்காமல் போகலாம். அதற்குப் பதிலாக, தொண்டையில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்ய அதிமதுரம் எனும் மூலிகையை உட்கொள்ளலாம்.

அதனைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. அதனை அன்றாடம் எடுத்துக்கொள்வதன் மூலம் சளிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

♦♦♦ நிலவேம்பின் மருத்துவ குணங்கள் குறித்து போதிய தகவல்கள் இல்லாததால் தமிழ் முரசு அணுகிய உள்ளூர் மருந்தகங்கள், மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கவில்லை.

ஆயினும், தகுந்த மருத்துவ நிபுணர் ஒருவரின் ஆலோசனைக்குப் பிறகே எந்த மூலிகையையும் உட்கொள்ள வேண்டும் என்றும் ஏனெனில் அவற்றால் வேறு பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!