லிட்டில் இந்தியா உணவகங்களின் புதுவித உத்திகள்; நிலவேம்புக் குடிநீர், நண்டு ரசம்
கொரோனா கிருமி சிங்கப்பூரையும் 'தொட்டுப்' பார்த்ததையடுத்து, லிட்டில் இந்தியா கடைக்காரர்களும் சற்று மந்தமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.
அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களைக் காண முடிவதில்லை என மளிகைக் கடைக்காரர்கள் அங்கலாய்க்கின்றனர்.
வார நாட்களில் தேக்கா சந்தை உணவங்காடி நிலையத்தின் பரபரப்பு மங்கிவிட்டது.
ஆனாலும், நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டும் என்ற நம்பிக்கையில் மூலிகைப் பொடிகளின், தாளிப்புப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
அதிலும் குறிப்பாக நிலவேம்புப் பொடியின் விற்பனை அமோகமாக இருக்கிறதாம்.
பஃப்ளோ சாலை, ‘ஸ்ரீ லேவண்டர் மல்டி மார்ட்’ கடைக்கு வெளியே 40க்கும் மேற்பட்ட பொடி வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
நிலவேம்பு, மஞ்சள் பொடிகளை அதிகமானோர் வாங்கிச் செல்வதாகக் கூறுகிறார் சிராங்கூன் சாலை, சதீஷ் டிரேடிங் அண்ட் என்டர்பிரைஸ் மளிகைக் கடையின் உரிமையாளர் திரு மாரிமுத்து துரைசாமி, 62.
ஆள்நடமாட்டம் குறைந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில் வாடிக்கையாளர்களைக் கவர லிட்டில் இந்தியா உணவகங்களில் சில நூதன முயற்சிகளில் இறங்கியுள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு நிலவேம்புக் குடிநீரை இலவசமாக வழங்குவது, விற்பனை செய்வது, நண்டு ரசம் இலவசமாக வழங்குவது போன்ற செயல்களில் லிட்டில் இந்தியாவின் உணவுக் கடைகள் சில செய்து வருகின்றன.
உண்மையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நிலவேம்பு கைகொடுக்குமா? மருத்துவ நிபுணர்களின் கருத்தை அறிய நாளைய (1/3/2020) தமிழ் முரசு நாளிதழின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!
#கொரோனா #சிங்கப்பூர்