பாசிர் கூடாங்: மலேசியாவின் பாசிர் கூடாங்கில் நிகழ்ந்த நச்சு வாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500க்கு அதிகரித்துள்ளது.
பாசிர் கூடாங் உள்ளரங்கில் உள்ள மருத்துவ நிலையத்தில் 780 புதிய சம்பவங்கள் பதிவாகியதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது.
இருந்தாலும் மருத்துவமனையில் 113 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று ஜோகூர் மாநில சுகாதார, சுற்றுச்சூழல், வேளாண்மை குழு வின் தலைவர் சஹ்ருடீன் ஜமால் தெரிவித்தார். மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்ற தனிப்பட்டவர்களின் எண்ணிக்கை 202.
சுல்தானா அமினா மருத்துவமனையிலும் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற 531 பேர் வீடு திரும்பி விட்டதாகவும் அவர் கூறினார்.
சுங்கைக் கிம் கிம் ஆற்றில் சட்ட விரோதமாக வீசப்பட்ட ரசாயனக் கழிவிலிருந்து நச்சு வாயு கிளம்பியதால் 111 பள்ளிகளை மூடவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
இந்நிலையில் சுங்கைக் கிம் கிம் சுற்று வட்டாரத்தை பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுப் பொது மக்களை வெளியேற்ற அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால் இதற்கு அவசிய மில்லை என்று அரசாங்கம் தெரிவித்தது.
பொதுமக்களை வெளியேற்றும் அளவுக்கு நிலைமை மோசமாக வில்லை என்று ஜோகூரில் உள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு நேரில் வருகையளித்த டாக்டர் மகாதீர் சொன்னார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு மகாதீர், "இந்தச் சம்பவத்தைக் கையாளும் அரசாங் கத்தின் மீது பொதுமக்கள் நம் பிக்கை வைக்க வேண்டும்," என்றார்.
மோசமான நிலைமையைக் கடந்துவிட்டோமோ என்று கேட்டதற்கு இப்போது அதை உறுதிப்படுத்த முடியாது என்றார்.
"முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது. இந்தச் சம்பவத்தை எப்படி கையாள வேண்டும் என்பது அதிகாரிகள் கையில்தான் உள்ளது," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சுத் தாமதமாக செயல்பட்டதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத் துள்ளது.
நச்சு வாயு கசிவு; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500க்கு அதிகரிப்பு
15 Mar 2019 18:32 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2019 08:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!