சனிக்கிழமைக்கு (ஆகஸ்ட் 31) திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு ஊர்வலத்திற்கு ஹாங்காங் போலிசார் தடை விதித்திருப்பதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 13வது வாரமாக ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவரும் ஹாங்காங்கில், போலிசார் விதித்த தடை ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்தைத் தூண்டக்கூடும்
என நம்பப்படுகிறது.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற பேரணிகளில் வன்முறை மூண்டதால், மனித உரிமை குழுவின் எதிர்வரும் ஊர்வலத்திற்கு அனுமதியளிப்பது பாதுகாப்புக்கு ஆபத்தானது என
போலிசார் கருதுவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்தது.
ஊர்வலத்திற்கு போலிசார் தடை விதித்திருப்பதாக புளூம்பர்க் செய்தி நிறுவனத்திடம் கூறிய ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் குமாரி போனி லியுங், தடையை நீக்குமாறு கோரிக்கை
செய்யப்போவதாகத் தெரிவித்தார்.