பொருள் சேவை வரி செலுத்தப்படாத 7,559 கார்ட்டன் சிகரெட்டுகள் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் வந்த இரண்டு வாகனங்களில் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டபோது குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கைப்பற்றினர்.
விசாரணைக்காக 22, 25, 41 வயதுகளில் இருக்கும் மூன்று மலேசியர்கள் சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடத்தல்காரர்களால் $656,299 மற்றும் $52,981 அளவிலான பொருள் சேவை வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்