கூகல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை மீது பாலிவுட் இயக்குநர் ஒருவர் மும்பையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
1996ஆம் வெளியான ‘அஜய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுனில் தர்ஷன். பல்வேறு படங்களை இயக்கியதுடன் சில படங்களை அவர் தயாரித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ என்ற படத்தை சுனில் எழுதி இயக்கினார்.
இந்நிலையில் ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ படம் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு சில லட்சம் முறை பார்க்கப்பட்டது.
இப்படத்தின் காப்புரிமை தம்மிடம் இருப்பதாக சுனில் கூறினார்.
யூடியூப் தளத்தில் படம் பதிவேற்றப்பட்டதால் தமக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வாதித்துள்ளார்.
தமது காப்புரிமை மீறப்பட்டதற்கு யூடியூப் தளத்தை வாங்கி நடத்தும் கூகல் நிறுவனமே பொறுப்பு என்று கூறி, அவர் திரு சுந்தர் பிச்சை மீதும்மேலும் சில கூகல் நிர்வாகிகள் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
திரு சுந்தர் பிச்சைக்கு இந்திய அரசாங்கம் பத்மபூஷன் விருதை வழங்குவதாக புதன்கிழமை அன்று அதன் குடியரசு தினத்தில் அறிவித்தது.