புதுடெல்லியில் இனி மீண்டும் பொ து இடங்களில் கட்டயாம் முகக்கவசம் அணியவேண்டும்.
தலைநகரிலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அந்த முடிவு எடுக்கப்பட்டது.
புதுடெல்லியில் வியாழன் (ஏப்ரல் 21) அன்று 1,009 புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.
ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 18 வரை அங்கு தொற்றுச் சம்பவங்கள் மும்மடங்கு அதிகரித்தன.
மேலும், ஏப்ரல் 9ஆம் தேதி முதல் பெறப்பட்ட கொவிட்-19 நோயாளிகளிடமிருந்து மாதிரிகளை எடுத்து அவற்றை மரபணு வரிசைப்படுத்தவும் புதுடெல்லி அரசாங்கம் தொடங்கியுள்ளது.
மிக அதிகமாகப் பரவக்கூடிய எக்ஸ்இ (XE) வகைக் கிருமி மும்பையில் இந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மாதிரிகளின் மரபணுக்களை வரிசைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மற்ற பல நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன.