வாக்குப்பதிவு நாளில் அடையாள அட்டைக்குப் பதிலாக சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் துறை இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்திற்கு அடையாள அட்டை மாற்ற அல்லது பெற அல்லது அடையாள அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான கோரிக்கைகள் பெருமளவு அதிகரித்துள்ளதாக அது கூறியது.
வாக்காளர் அட்டையில் உள்ள முகவரி, வாக்காளர் பதிவேட்டைத் தயாரிப்பதற்கான இறுதிநாளான மார்ச் 1ஆம் தேதி வரையிலான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்று தேர்தல் துறை கூறியது. அந்தத் தேதி அன்று பதிவு செய்யப்பட்டிருந்த முகவரிகளின் அடிப்படையில் வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் என அது தெரிவித்தது.
தேர்தல் துறையின் இணையத்தளத்தின்படி, சீருடை அதிகாரிகளின் தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வழங்கிய அடையாள அட்டைகளும் அனுமதிக்கப்படுகின்றன.
வாக்காளர் தனது கடவுச்சீட்டைக் கொண்டுவந்தால், தேர்தல் அதிகாரி அவரது அடையாள அட்டை எண்ணை மின் பதிவு முறையில் பதிவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online