தனிநபர் பாதுகாப்பு ஆணையை மீறிய ஆடவருக்கு சிறை

தனிநபர் பாதுகாப்பு ஆணையை மீறிய 47 வயது ஆடவருக்கு ஆறு வாரங்கள் சிறை தண்டனை செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது. அவர்மீது தானாக முன்வந்து காயப்படுத்துதல், தனிநபர் பாதுகாப்பு ஆணையை மீறுதல் போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அந்த ஆடவர் தன்மீது சுமத்தப்பட்டக் குற்றங்களை ஒப்புக்கொண்டார். அவர் சீன நாட்டவர் என்றும் சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கும் அவருடைய மனைவிக்கும் 2015ஆம் ஆண்டிலிருந்து கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. அவருடைய மனைவி விவாகரத்து வேண்டியும் அவர் அதைத் தர மறுத்தார் எனக் கூறப்பட்டது.

தன் கணவரிடமிருந்து தன்னையும், அவர்களின் பிள்ளைகளையும் பாதுகாத்துக்கொள்ள அந்த மாது 2021 நவம்பர் மாதம் தனிநபர் பாதுகாப்பு ஆணையை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுள்ளார். அப்போது அந்த ஆடவருக்கு மது தொடர்பான பிரச்சனைகளுக்காக ஆலோசனைப் பெறவும் உத்தரவிடப்பட்டது.

அந்த ஆடவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வேறு ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கணவர் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மே மாதத்திலும் இதே போன்ற சம்பவம் ஒன்று நடந்ததுள்ளது. அப்போது அந்த ஆடவர் தன் மனைவியைத் தாக்கியுள்ளார். இதனால் அந்த மாதுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உதவிக்காக அவர் காவல்துறையை அழைத்தார். காவல்துறை அந்த ஆடவரைக் கைது செய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!