சிங்கப்பூரில் சாலையில் கோடரியுடன் நடந்து சென்ற ஆடவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார்.
ஆடவர் ஸ்டாம்ஃபர்ட் சாலையில்சண்டையிட்டதாக நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
காணொளியில் ஆடவர் ராஃப்பிள்ஸ் சிட்டி நோக்கி செல்லும் ஸ்டாம்ஃபர்ட் சாலை மற்றும் விக்டோரியா ஸ்திரீட் சந்திப்பில் கோடரியுடன் காவல்துறை அதிகாரிகள் அருகே நடந்து செல்கிறார்.
அதிகாரிகளை நெருங்கியவுடன் ஆடவர் கோடரியைத் தூக்கி எறிந்தார். அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக பின்னிரவு 2:30 மணிவாக்கில் காவல்துறைக்கு தகவல் வந்ததாக அதிகாரிகள் கூறினர். அதைத் தொடர்ந்து அந்த 25 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
71 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் 29 வயது ஆடவர் ஒருவர் விசாரணையில் உதவி வருகிறார்.