கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் டிரேஸ்டுகெதர் திட்டத்துக்கு விருது கிடைத்துள்ளது.
மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் புத்தாக்கத்துடன் பயன்படுத்துவதற்காக டிரேஸ்டுகெதர் திட்டத்துக்கு அந்த அனைத்துலக விருதை சந்தை ஆய்வு நிறுவனமான கார்ட்னர் இன்கார்ப்பரேட் நேற்று வழங்கியது. உலகெங்கும் உள்ள அரசாங்க அமைப்புகளிடம் வாக்களிப்பு நடத்திய பிறகு வெற்றியாளர்கள் நிர்ணயிக்கப்பட்டனர்.
ஆசியப் பிசிபிக் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு டிரேஸ்டுகெதர் திட்டத்துடன் தைவானைச் சேர்ந்த இரண்டு திட்டங்களும் இந்தியாவின் ஒரு திட்டமும் தகுதி பெற்றன.