ரோவல் ரோட்டுக்கு அருகில் சிராங்கூன் சாலையில் நேற்று மாலையில் மது போதையில் காரை ஓட்டி, பாதசாரிகள் இருவர் மீது மோதிய 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
காயமடைந்த 40 வயது ஆடவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.
விபத்தில் சிக்கிய இன்னொரு பாதசாரி காயமின்றி தப்பினார்.
இவ்விபத்து குறித்து மாலை 5.07 மணிக்குத் தகவல் வந்ததாக போலிஸ் தெரிவித்தது.
படம்: ஃபேஸ்புக்/ரேவன் சியூ