சேவைப் பொறியாளரான திரு அசாடுஸ்ஸமான் நூர் ரஹாட், சிங்கப்பூர் 'கித்தார்' இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் பங்ளாதேஷ் ஊழியர்கள் இடம்பெறும் 'ராக் பேண்ட்' இசைக்குழு ஒன்றை இவர் தொடங்கினார்.
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் கதைகளை எடுத்துக்கூறும் ‘சிங்கப்பூர் சோனெட்ஸ்’ எனும் புதிய காணொளித் தொடர் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அத்தொடரின் ஒரு பகுதியாக திரு அசாடுஸ்ஸமானின் கதை இடம்பெறுகிறது.