சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்தன

சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (மார்ச் 1) நிலவரப்படி 24,070ஆக இருந்தது. திங்கள்கிழமை நிலவரப்படி, 13,544 பேருக்குத் தொற்று உறுதியானது.

சென்ற செவ்வாய்க்கிழமை ஆக உச்சமாக 26,032 சம்பவங்கள் பதிவாகின. அதனையடுத்து நேற்று 20,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் உறுதியானது.

வாரயிறுதிகளில் பலரும் சமூக ஒன்றுகூடல்களுக்குச் செல்வதால், பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் தொற்றுச் சம்பவஙகள் மற்ற நாள்களைவிட அதிகமாக பாதிவாகின்றன.

நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனைகளில் சிகிச்கை பெறுவோரின் எண்ணிக்கை 1,726 பேர் ஆக இருந்தது. முந்தைய தினம் இந்த எண்ணிக்கை 1,649ஆக இருந்தது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 242 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 53 பேர் உள்ளனர்.

கொவிட்-19க்கு மேலும் பதினொறு பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 189 பேருக்குத் தொற்று உறுதியானது.

வாராந்திர தொற்று விகிதம் செவ்வாய்க்கிழமை அன்று 1.02ஆக இருந்தது. திங்கள்கிழமை அது 1.09ஆக இருந்தது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!