ஹவ்காங்கில் உள்ள ஒரு வீவக வீட்டில் தீ மூண்டது.
ஹவ்காங் அவென்யூ நான்கில் உள்ள வீவக புளோக் 682ன் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
பாதிக்கப்பட்ட வீட்டின் ஓர் அறையில் இருந்த பொருள்களுக்கும் தீக்கும் தொடர்பிருந்ததாகக் கூறப்பட்டது.
25 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீ மூண்டதற்கான காரணத்தை அறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.