பீச் ரோட்டில் ஓர் ஆடவருக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இருவரும் சாலையோறத்தில் ஒருவரையொருவர் உதைப்பதையும் கூச்சல் போடுவதையும் காட்டும் காணொளி சமூகத் தளங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து நேற்று காலை 9 மணியளவில் அழைப்பு வந்ததாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.
ஒரு கட்டடத்திலிருந்து காணொளி பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. நடைப்பாதையில் இருந்த பெண் ஆடவரைப் பார்த்து கூச்சல் போடுவதும், கை செய்கைகள் காட்டுவதும் தெரிகிறது. இது நடக்கும்போது ஆடவர் தம்முடைய வாகனத்தில் இருந்தார். அவர் வாகனத்தை ஓட்டிச்செல்லும் சமயத்தில் அந்தப் பெண் வாகனத்தை ஓங்கி உதைத்தார். இதனையடுத்து ஆடவர் வாகனத்திலிருந்து வெளியேறினார். இருவரும் சண்டை போட தொடங்கினர். மாது நபரை உதைக்கவும், அதற்குப் பதிலடியாக அவர் பெண்ணை அறைந்தார்.
இப்படி இருவரும் அடித்துகொள்ள, இறுதியில் ஆடவர் பெண்ணை தள்ளிவிட்டு வாகனத்தை ஓட்டிசென்றார்.