சீனா-தைவான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ) தனது இரண்டு விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
தைவான் எல்லைப்பகுதிய்ல் சீனா குறைந்தது ஆறு இடங்களில் உண்மையான குண்டுகளைக் கொண்டு போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் அவ்வட்டாரத்தில் பதற்ற நிலை உருவாகி உள்ளது. மேலும் அங்குள்ள ஆகாயவெளியில் செல்ல தடைகளும் நிலவி வருகின்றன.
அதனால் சிங்கப்பூரிலிருது தைபெய் செல்லும் SQ878, தைபெய்யிலிருந்து சிங்கப்பூர் வரும் SQ879 ஆகிய இரு விமான சேவைகளும் இன்று (ஆகஸ்ட் 5) ரத்து செய்யப்பட்டன.
"எங்கள் வாடிக்கயாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பே முதன்மையானது. நிலைமையை எஸ்ஐஏ தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்படும்போது மாற்றங்களைச் செய்வோம்," என்று எஸ்ஐஏ பேச்சாளர் கூறினார்.
அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நேன்சி பெலோசி கடந்த புதன்கிழமை தைவான் சென்றார். அந்த வருகையைக் கண்டிக்கும் வீதமாக சீனா வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை
உண்மையான குண்டுகளைக் கொன்டு போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.