கேலாங் ஈஸ்ட் பூங்காவுக்கு அருகே உள்ள கால்வாயில் ஆடவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, 9 மணி அளவில் பூங்காவைச் சுற்றி தடுப்புவேலி போடப்பட்டது. காவல் துறையினர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் ஆகியோர் அவ்விடத்தில் குவிக்கப்பட்டனர். காவல்துறையின் கூர்கா படையினர், கே9 படையினர் சம்பவ இடத்துக்கு சுமார் 11 மணியளவில் வந்துசேர்ந்தனர்.
சம்பவத்தை பார்த்த ஒருவர், மாண்டவரின் உடல் முழுமையாக உடுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார். சடலத்துக்கு அருகே அதிக அளவில் ரத்தம் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.
கடைசியாக கூர்கா படையினர் இவ்வாண்டு ஜனவரியில் அப்பர் புக்கிட் தீமா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் 11 வயது இரட்டையரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டபோது, அந்த இடத்துக்கு அனுப்பட்டனர்.