விஷம் பாதித்து மூன்று நாய்கள் இறந்துவிட்டதாக அறிவிப்புகள் வந்ததனால், பாரி அவென்யுவில் உள்ள திடலுக்கு யாரும் நாய்களை அழைத்துவர வேண்டாம் என்று உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விஷத்தினால் வரக்கூடிய வாந்தி, தொடர் வலுப்பு போன்ற பிரச்சினைகள் தங்களது நாய்களுக்கு ஏற்பட்டதாக உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அந்தத் திடலுக்கு நாய்களை விளையாடவும் ஓடவும் கூட்டிச் சென்றிருந்த சில உரிமையாளர்கள் சமூக ஊடகங்களில் இப்பிரச்சினைப் பற்றி தெரிவித்துள்ளனர்.
பிரபலமான அத்திடல் காற்பந்துத் திடலை விட சற்றுப் பெரியது. நாய்களின் உரிமையாளர்கள் அங்கு அடிக்கடி தங்கள் பிராணிகளுடன் செல்வது வழக்கம்.
பாவுலோ என்ற நாயின் உரிமையாளர், இன்ஸ்டாகிராமில் வழக்கத்துக்குமாறான பிரச்சினைகளினால் தமது பிராணி 8 மணி நேரம் உயிருக்கு போராடி பின் மடிந்துவிட்டதாகவும் இறுதிவரை அவர் செல்லப்பிராணியுடன் பிராணிகள் மருந்தகத்தில் உடன் இருந்ததாகவும் பதிவிட்டிருந்தார்.
பெரிய எழுத்துகளில் நாய் விஷம் என்ற ஆங்கிலப் பதாகை அத்திடிலில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது.
பல நாய்கள் மடிந்துவிட்டன, ஜாக்கிரதை என்ற எச்சரிக்கையுடன் அப்பலகையில் பாரி அவென்யு உட்பட அருகில் உள்ள பிலிபிஸ் அவென்யு, சன்டிலான்ட்ஸ் அவென்யு ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம் ஆகியன இதனை விசாரணை செய்கின்றன.