தோ பாயோ விளையாட்டு நிலையத்தில் முன்பு காணப்பட்ட நீல நிற நீர் நிரம்பிய நீச்சல் குளங்கள் இப்போது காற்பந்துத் திடல்கள்போல காட்சியளிக்கின்றன.
நவம்பர் 28ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எடுத்த படங்கள் அவ்வாறு காட்டின.
தோ பாயோ நீச்சல் நிலையம் அமைந்துள்ள தோ பாயோ விளையாட்டு நிலையம், புதிய வட்டார விளையாட்டு நிலையத்தின் கட்டுமானத்துக்காக அக்டோபர் 31ஆம் தேதி மூடப்பட்டது. புதிய நிலையம் 2030ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீச்சல் குளங்களில் ‘குளோரின்’ இல்லாததால் நீரின் நிறம் மாறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் கூறியது.
நீச்சல் குளங்களை இடிக்கும்போது தூசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத் தண்ணீர் தேவைப்படுவதால், நீச்சல் குளங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படவில்லை என்றும் அது குறிப்பிட்டது.