சிங்டெல் கைப்பேசி இணையச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது

சிங்டெல் நிறுவனத்தின் கைப்பேசி இணையச் சேவையைப் பயன்படுத்துவதில் சனிக்கிழமை (டிசம்பர் 9) காலை ஆயிரக்கணக்கானோர் சிரமப்பட்டதைத் தொடர்ந்து, அச்சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது.

இதுகுறித்து விளக்கமளித்த சிங்டெல், “இன்றைய தினம் காலையில் எங்களுடைய வாடிக்கையாளர்களில் பலர் அவர்களது கைப்பேசி இணையச் சேவையைப் பயன்படுத்துவதில் அவ்வப்போது சிரமப்பட்டனர்.

“சிரமத்துக்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இதில் வாடிக்கையாளர்களின் பொறுமைக்காக நன்றி கூறுகிறோம்,” என்றது.

சேவைத் தடையைக் கண்காணிக்கும் ‘டௌன்டிட்டெக்டர்’ இணையப்பக்கத்திற்கு காலை 6.04 மணிக்கு பயனாளர்களிடம் இருந்து புகார் வரத் தொடங்கியது. இரண்டு மணி நேரத்தில் புகார்களின் எண்ணிக்கை 1,231ஐ எட்டியது.

பயனாளர்களில் 76 விழுக்காட்டினர், சிங்டெலின் கைப்பேசி இணையச் சேவையைப் பயன்படுத்துவதில் தாங்கள் சிரமம் எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டனர். சமிக்ஞை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதாக 19 விழுக்காட்டினர் கூறினர்.

இந்நிலையில், காலை 8.17 மணிக்கெல்லாம் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியதாக சிங்டெல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!