வேலைவாய்ப்பு

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023) ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 88,400 கூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள்களைப் பணியில் அமர்த்தும் எண்ணம், சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாகக் குறைந்துள்ளது.
வேலை கலாசாரம் இன்றைய நவீன யுகத்தில் கணிசமான மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. இந்த மாற்றங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள், இளம் தொழில் நிபுணர்கள். தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும் மாறிவரும் சமூக வழக்கங்களாலும் வேலையிடத்தில் நீக்குப்போக்குத் தன்மை இருப்பது முக்கியம் என்றும் இளம் தலைமுறையினர் கருதுகின்றனர். அதனால், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தங்களது வாழ்க்கைத்தொழிலுக்கும் இடையே சமநிலை காணும் வேலைச் சூழல்களை நாடுகின்றனர். இதுகுறித்து, அறிந்து வந்தது இவ்வார இளையர் முரசு.
சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு 63லிருந்து 64க்கு உயர்த்தப்படவுள்ளது. மேலும், மறுவேலைவாய்ப்புக்கான வயது 68லிருந்து 69க்கு உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்கள் கூடுதல் காலம் வேலையில் இருப்பதற்கான சட்டபூர்வ பாதுகாப்பை இந்த மாற்றங்கள் அளிக்கவல்லவை.
சென்னை: பிரபல ஃபோர்டு நிறுவனம் மென்பொருள் தயாரிப்புப் பணியைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சென்னையில் நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுவர் என்றும் கூறப்படுகிறது.