தமிழ்

உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளைப் பற்றிய ஆய்வுத் தொகுப்பு நூல் வெளியீடு வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 18) விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்றது.
இன்று தமிழ்முரசு நிறுவனர் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பிறந்தநாள்.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21ஆம் தேதியன்று, காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒரு நேர்முக ஆய்வரங்க மாநாடு நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமையன்று காலாங் சமூக மன்றத்தில், காலாங் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் (ஐஏஈசி) ஏற்பாட்டில் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்றது நவரசத் திருவிழா 2024.
மனத்தில் எழுச்சி தருகின்ற தமிழைப் பேசும்போது அடையும் உணர்ச்சிப் பெருக்கை வீட்டில் தாய் தந்தையுடன் பேசும் உருது மொழியிலிருந்தும் தாம் பெறவில்லை என்று ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற ‘ஆற்றல்மிகு தமிழ்’ நிகழ்ச்சியில் மேடைப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா கூறினார்.