நீதிபதி

திரிபுரா: வாக்குமூலம் அளிக்க வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொள்ள முயன்ற நீதிபதியை அம்மாநில உயர் நீதிமன்றம் அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
லாஸ் வேகஸ்: அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி தனக்குத் தீர்ப்பளிக்கவிருக்கும் வேளையில் அவரை நோக்கித் தாவிக் குதித்த ஆடவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மதுரை: தனது கணவரின் மாதச் சம்பளம் எவ்வளவு என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அமைச்சர்களுக்கு எதிரான ஊழல், சொத்துக்குவிப்பு உள்ளிட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) முதல் விசாரிக்க உள்ளார்.
கள்ளக்குறிச்சி: தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி நீதிபதிகள் பாதபூஜை செய்த செயல் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துாய்மைப் பணித் திட்ட சிறப்பு முகாமை உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், துவக்கி வைத்து தூய்மை பணியாளர்களைப் பாராட்டிப் பேசினார்.

அப்போது, மூத்த துாய்மை பணியாளர்களான உமாவதி, ராஜாமணி ஆகியோரை உட்கார வைத்து, அவர்களுக்குப் பாத பூஜை செய்து, வணங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.