ஆப்பிள்

வாஷிங்டன்: அமெரிக்க நீதித் துறை, ஆப்பிள் நிறுவனத்தின் மீது மார்ச் 21ஆம் தேதி வழக்கு தொடுக்கவிருப்பதாக புளூம்பெர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் வெளியிடவிருக்கும் புதிய ஐஃபோனில், கூகல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு உருவாக்கமான ஜெமினி என்னும் செயலியைப் பயன்படுத்துவது குறித்து கூகல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆப்பிள் நிறுவனம், மார்ச் 5ஆம் தேதி, மென்பொருள் உருவாக்குவோருக்கான முதல் தென்கிழக்காசிய நிலையத்தை சிங்கப்பூரில் திறந்தது.
தைப்பே: ஆப்பிள் நிறுவனம், ‘ஐபேட்’ தயாரிப்புக்கான வளங்களை வியட்நாமுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிடுவதாக நிக்கே நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆதாரங்களை மேற்கோள்காட்டி, டிசம்பர் 8ஆம் தேதி, அது அவ்வாறு தகவல் வெளியிட்டது.
‘ஆப்பிள்’ சாதனங்கள் வைத்திருப்பவர்கள் அவர்களின் மென்பொருளை உடனடியாக மேம்படுத்திக்கொள்ளுமாறு சிங்கப்பூர் இணைய அவசர உதவிக் குழு அறிவுறுத்தியுள்ளது.