விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்லூரி மாணவியுடன் பழகி, அவரைக் கர்ப்பமாக்கிய ஆடவருக்கு அப்பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர் திண்டிவனம் போலிசார்.
திண்டிவனத்தை அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகந்நாதன் என்பவரின் மகளான 20 வயது கோகிலா, தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை இறுதியாண்டு பயின்று வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பரமசிவம் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நெருங்கிய பழக்கத்தில் கர்ப்பமான கோகிலா, அதனை வீட்டில் சொல்ல பயந்து, கல்லூரிக்குச் சென்று வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான கோகிலாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது.
அதனை அறிந்துகொண்ட கோகிலாவின் பெற்றோர் அவரை ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மேல் சிகிச்சைக்காக தாயும் சேயும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக திண்டிவனம் அரசு மருத்துவமனை நிர்வாகம் போலிசில் புகார் அளித்தது.
பரமசிவம், கோகிலா ஆகியோரை திண்டிவனம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்ததில், இருவரும் காதலை ஒப்புக்கொண்டனர்.
கோகிலாவைத் திருமணம் செய்துகொள்ள பரமசிவம் சம்மதித்ததையடுத்து, திண்டிவனம் மகளிர் காவல்நிலையம் அருகே உள்ள கோயிலில் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
#பிரசவம்#திருமணம்#கல்லூரிமாணவி#திண்டிவனம்#தமிழ்முரசு