கோவை-சிங்கப்பூர் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, கடந்த ஆண்டு தொடக்கம் முதல், தமிழ்நாட்டின் கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானச் சேவை நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.

அதன்பின், கோவைக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் சார்ஜாவுக்கும் இடையே தினசரி விமானச் சேவை இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், கோவைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வாரத்தில், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமானச் சேவை வழங்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 10.45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானம், மீண்டும் இரவு 11:45 மணிக்கு கோவையில் இருந்து சிங்கப்பூர் புறப்படும். இந்த விமானச் சேவையை, ஸ்கூட் நிறுவனம் வழங்குகிறது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “சிங்கப்பூரில் இருந்து நேரடியாக கோவை வருபவர்கள் மட்டுமே இந்த விமானச் சேவையைப் பயன்படுத்த முடியும். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து, அங்கிருந்து கோவை வர முயற்சி செய்பவர்கள் இச்சேவையைப் பயன்படுத்த முடியாது,” என்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!