ஆட்டோவில் தவறவிட்ட லட்ச ரூபாயை ஒப்படைத்த ஓட்டுநருக்குப் பாராட்டு

சென்னை: சென்னையில் சவாரிக்காகக் காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தமது ஆட்டோவின் இருக்கையில் ஒரு கைப்பை இருப்பதைக் கண்டார்.

அதைத் திறந்து பார்த்தபோது அதனுள் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் இருந்தது. அத்துடன் அடையாள அட்டை ஒன்றும் அந்தப் பையில் இருந்தது.

தி.நகரில் இருந்து அரும்பாக்கத்துக்கு ஒரு பயணியை ஏற்றிச் சென்றது அந்த ஓட்டுநரின் நினைவுக்கு வந்தது.

ஆனால், அந்தப் பயணியை எங்கே போய் தேடுவது என்று தெரியாத நிலையில், ஸ்ரீதர் என்ற அந்த ஓட்டுநர் அந்தக் கைப்பையை வேப்பேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

ஸ்ரீதர் ஒப்படைத்த கைப்பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து பணத்தைத் தவறவிட்ட அந்தப் பயணியின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகள், அந்தப் பயணியை வரவழைத்தனர்.

பூர்ணிமா என்ற அந்தப் பயணி, நேர்மையான அந்த ஆட்டோ ஓட்டுநரைப் பாராட்டி, அவருக்கு ரூ.5,000ஐ சன்மானமாக வழங்கினார். ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீதரை காவல்துறை அதிகாரிகளும் பாராட்டினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!