திமுகவையும் மக்கள் நீதி மய்யத்தையும் மனிதநேயம் இணைத்துள்ளது: கமல்ஹாசன்

சென்னை: அரசியலைக் கடந்த மனிதநேயம் தான் திமுகவையும் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் இணைத்துள்ளது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

தனது பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லாருக்கும் தனிக்கட்சி உள்ளது என்றும் அக்கட்சி மீது விசுவாசம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“ஆனால் அதைவிட மனித நேயம் முக்கியம். அதுதான் எங்களை இணைத்துள்ளது என்பேன். எங்கள் பணி மனித நேயத்துடன் தொடரும்,” என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன்.

முன்னதாக சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அவர், மாசு இல்லா குடிநீரை வழங்கும் இந்த இயந்திரத்தை அனைத்து மருத்துமனைகளுக்கும் வழங்குவதற்கு தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!