கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த 82 வயதான கிட்டம்மாள் என்ற மூதாட்டி பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாள்தோறும் தனது பேரன்கள் இருவருடன் சேர்ந்து உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று பயிற்சி மேற்கொள்கிறார்.
அண்மையில் இந்திய அளவில் நடத்தப்பட்ட பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில், முதல் முயற்சியிலேயே ஐம்பது கிலோ எடையைத் தூக்கி 5ஆம் இடத்தை பிடித்தார் கிட்டம்மாள். அவரது சாதனையைப் பாராட்டி, ‘தென்னிந்தியாவின் வலுவான பெண்மணி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.