இந்தியா

புதுடெல்லி: டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் லவ்லி தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அர்வீந்தர், பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி உள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 233 வட்டப் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது. மேலும், வறட்சி, பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18 ஆயிரத்து 171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது.
திருப்பதி: தெலுங்கு தேசக் கட்சியின் தேர்தல் பிரசார வாகனம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சிலர் தீ வைத்துவிட்டு தப்பி ஓடினர். அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் அறிக்கையில், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.
கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.