தலையங்கம்

பொருளியல் படு வேகத்தில் உருமாறி வருகிறது. சொல்லப்போனால் அதன் எல்லா துறைகளுமே முன்பு இருந்ததைப் போல் இப்போது இல்லை. அவை செயல்படும் முறைகள் தலைகீழ்மாற்றம் காண்கின்றன. போகப்போக இந்த நிலை நீடிக்கும், வேகமடையும் என்பது தவிர்க்க இயலாததாகி வருகிறது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை, நன்னடத்தையில் இருந்தும் பொறுப்பு, கடமைகளில் இருந்தும் அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வழிதவறி நடப்பது என்பது மிகமிக அரிதானது.
பணவீக்கம் அதாவது விலைவாசிப் பிரச்சினை பல அம்சங்களைப் பொறுத்தது. கொவிட்-19 காரணமாக உலகமே முடங்கிப்போய் சேவை, பொருள் விநியோகக் கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதை அடுத்து பணவீக்கம் ஏறுமுகமானது. அது தணியத் தொடங்கிய நிலையில் உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்ததால் நிலைமை மேலும் மோசமானது.
சிங்கப்பூர் சுதந்திரத்துடன் தனித்துவிடப்பட்டபோது அதற்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட தலைவர்கள், நாட்டில் எந்த இயற்கை வளமும் இல்லை என்றாலும் சிங்கப்பூரை உலகில் தலைசிறந்த நாடாக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.
சிங்கப்பூரின் மிக முக்கியமான ஒரே வளம் அதன் மக்கள்தான். சிங்கப்பூர் மக்கள் உலகில் ஆக அதிக ஆயுளைக் கொண்டவர்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் உலக அளவில் முதல் தரமானது.