நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர் கைது

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய 19 வயது இளையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலிசார் ஆங்காங்கு நிறுவியிருக்கும் கேமராக்களின் உதவியுடன் அந்த இளையர் வெகு விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

நேற்று (நவம்பர் 19) இது குறித்த தகவல் அறிந்த போலிசார் அதே நாளில் சம்பந்தப்பட்ட இளையரைக் கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தச் சம்பவம் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள லோம்பாங் ரோட்டில் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 18) நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த இளையருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $2,500 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!