நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய 19 வயது இளையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலிசார் ஆங்காங்கு நிறுவியிருக்கும் கேமராக்களின் உதவியுடன் அந்த இளையர் வெகு விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
நேற்று (நவம்பர் 19) இது குறித்த தகவல் அறிந்த போலிசார் அதே நாளில் சம்பந்தப்பட்ட இளையரைக் கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தச் சம்பவம் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள லோம்பாங் ரோட்டில் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 18) நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த இளையருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $2,500 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.