இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு 'கோவின்' என்னும் பெயரில் அரசாங்கம் சான்றிதழ் வழங்குகிறது. அனைத்துலகப் பயணங்களை மேற்கொள்வோரின் கடப்பிதழுடன் இந்தச் சான்றிதழ் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்று பரவல் காலத்தின்போது அனைத்துலகப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் பெரும் சிக்கலை எதிர்நோக்கும் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகளை ஆராய்ந்த பின்னர் அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசாங்கக் குழுக்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் வரையப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் தடுப்பூசி தொடர்பான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை சுகாதார அமைச்சு திங்கட்கிழமை மாலை அறிவித்தது.
படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் கட்டாயத்தில் இருப்போர், தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியினர் போன்றோரின் கடப்பிதழுடன் 'கோவின்' தடுப்பூசிச் சான்றிதழ் இணைக்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இவர்களில் ஏற்கெனவே ஒரு முறை தடுப்பூசி போட்டு இரண்டாவது தடுப்பூசிக்காக 84 நாட்கள் காத்திருப்பில் இருப்போரின் பயண தேதி இந்த காலக்
கெடுவுக்குள் இருப்பின் அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை 28 நாட்களுக்குப் பின்னர் போடவுடம் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு விதிவிலக்கு பெற்றோருக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்குவதைக் கவனிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உரிய அதிகாரியை எல்லா மாநிலங் கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் நியமிக்கலாம் என்று சுகாதார அமைச்சு அறவித்துள்ளது.
புதிய முடிவுக்கு ஏற்ற வகையில் 'கோவின்' பதிவுமுறையில் இரண்டாவது தடுப்பூசிக்கான மாற்றத்தை அரசாங்கம் விரைவில் செய்யும் என்றும் அது கூறியது.
மேலும் தடுப்பூசி சான்றிதழில் கோவிஷீல்டு தடுப்பூசி என்று குறிப்பிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால் மற்றொரு தடுப்பூசியான கோவேக்சின் போட்டுக்கொண்டவர்கள் கவலை அடைந்து உள்ளதாகவும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப்பிடுகிறது. குறிப்பாக, ஒன்று அல்லது இரண்டு முறை கோவேக்சின் தடுப்பூசியை ஏற்கெனவே போட்டுக்கொண்ட பின்னர், தற்போது படிப்பு, வேலை தொடர்பாக அனைத்துலகப் பயணம் மேற்கொள்ளும் கட்டாயத்தில் இருப்போரிடையே கவலை எழுந்துள்ளதாக அச்செய்தி தெரிவித்தது.
கோவேக்சின் தடுப்பூசி தொடர்பான பயண நெறிமுறைகள் எதுவும் அரசாங்கத்தால் அறிவிக்கப்படவில்லை. மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தையும் இந்தத் தடுப்பூசி இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கோவேக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசிக்கே அதிக நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப் பதாக பரிசோதனை முடிவுகள் தெரி வித்துள்ளன.
இதற்காக 13 மாநிலங்களில் 515 சுகாதார ஊழியர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இவர்களில் 425 பேர் கோவிஷீல்டும் 90 பேர் கோ வேக்சினும் இருமுறை போட்டுக் கொண்டவர்கள்.