உள்ளூரில் இன்று (ஜூலை 6) புதிதாக இருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது தற்போது இன்னும் கண்டறியப்படவில்லை.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த எட்டுப் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த எட்டுப் பேரில் எழுவருக்கு சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் தொற்று உறுதியானது. இங்கு வந்த பிறகு தங்குமிடத்தில் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வந்தபோது எஞ்சிய ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,640ஆக உள்ளது.