ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் திறந்து வைத்த தாமே முதலில் லாரி ஓட்டிச் சென்ற பாலத்தில் தீப்பிடித்துக் கொண்டுள்ளது.
ரஷ்யாவை கிரைமிய தீபகற்பத்துடன் இணைக்கும் ஒரே பாலம் அது.
உக்ரேனின் தெற்குப் பகுதியில் போரிட்டு வரும் ரஷ்ய துருப்புகள் அப்பாலம் வழியாகத்தான் ஆயுதங்களும் தளவாடங்களும் சென்றுகொண்டிருந்தன.
சுமார் 19 கிலோமீட்டர் தொலைவுள்ள கெர்ச் பாலத்தின் ஒரு பகுதி சரிந்து கடலுக்குள் விழுந்துள்ளது.
அந்தப் பாலத்தில் லாரி ஒன்று வெடிப்புக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த ரயில் தண்டவாளத்தில் எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்குரயிலும் தீப்பற்றிக் கொண்டது.
கரும்புகையைக் கக்கியபடி எரிந்துகொண்டிருந்த பாலத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில் தீ போல பரவின.
உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் அந்த வெடிப்பைத் தொடக்கம் என்று வருணித்து டுவிட்டரில் பதிவிட்டார்.
ஆனால் விபத்துக்கு உக்ரேன்தான் பொறுப்பு என்று அவர் நேரடியாகக் கூறவில்லை.