மலேசியாவின் அன்னை தெரேசா எனக் கருதப்படும் ஏ. மங்களம் காலமானார். அவருக்கு வயது 97.
அவரின் மறைவுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அன்னை மங்களம் (மதர் மங்களம்) என்றழைக்கப்படும் இவர், 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பியோர் லைஃப் சொசைட்டி’ சமூக சேவை அமைப்பின் வாழ்நாள் தலைவராக இருந்தார்.
இவர் பல மனிதாபிமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
2010ஆம் ஆண்டில் கல்வி, சமூகம் ஆகியவற்றுக்கான மெர்டேக்கா விருதை வென்றவர் திருவாட்டி மங்களம்.
மலேசியாவின் சமயங்களுகளுக்கு இடையிலான அமைப்பின் துணைத் தலைவராகவும் இவர் பதவி வகித்திருக்கிறார்.