இந்தோனீசியா, அதன் அருகிலுள்ள திமோர் லெஸ்டெ பகுதிகளைப் புயல்காற்றும் கடும் மழையும் வாட்டி வதைத்து வருகிறது. வெள்ளப் பாதிப்பால் இதுவரை குறைந்தது 157 பேர் உயிரிழந்துவிட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் மரண எண்ணிக்கை 86ஆக மாற்றப்பட்டது.
பலரை இன்னும் காணவில்லை என்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துவிட்டனர் என்றும் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். மருத்துவமனைகள், பாலங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன என்றும் 10,000க்கும் மேற்பட்டோர் தற்காலிகத் தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள 70க்கும் மேற்பட்டோரைத் தேடி மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.