ஜகார்த்தா: இந்தோனீசியா கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடி வரும் வேளையில், உயிர்வாயு உருளைகளை இறக்குமதி செய்ய அந்நாடு திட்டமிட்டுள்ளது.
இந்தோனீசியாவின் ஜாவாவில் கடுமையான உயிர்வாயு தட்டுப்பாடு நிலவுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெறுமாறு அரசாங்கம் வலியுறுத்துவதாக சுகாதார அமைச்சர் நேற்று தெரிவித்தார். அதற்கு ஏற்ற வகையில் காணொளி வழி மருத்துவத்திற்கும் இந்தோனீசிய மருத்துவமனைகள் தயாராகி வருகின்றன. அங்கு ஒரே நாளில் நேற்று 558 பேர் மாண்டனர், 29,745 பேர் தொற்றுக்கு ஆளாகினர்.