பண்டார்: புருணையில் கிட்டத்திட்ட 15 மாதங்களுக்குப் பிறகு ஏழு உள்ளுர் கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கடுமையான சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களில் ஐவர் வெளிநாட்டிற்குச் செல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே உணவகங்களில் அமர்ந்து உண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இணைய வழி கற்றல் நடை
முறைப்படுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டுக் கூடங்கள், பொழுதுபோக்கு மையங்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும்.
அங்கு கடைசியாக உள்ளூர் தொற்று சம்பவம் சென்ற ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி பதிவானது.