பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 20 பேர் பலி, 200க்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத் தலைநகர் குவெட்டாவில் இருந்து ஏறத்தாழ 100 கி.மீ. தொலைவில் உள்ள பல பகுதிகளிலும் இன்று (அக்டோபர் 7) அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 20 பேர் மாண்டுவிட்டதாகவும் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளின் சுவர்களும் கூரைகளும் இடிந்து விழுந்ததில் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக அமெரிக்க ஆய்வு நிலையம் தெரிவித்தது.

மீட்புப்பணிகள் தொடர்வதாக மாநில உள்துறை அமைச்சர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!